இதப்படிங்க மொதல்ல...

வந்தோமா படிச்சோமா, டகடகன்னு கமென்ட்டை போடணும். அப்போ தான் அடுத்த கதையும் சீக்கிரம் வரும், இத விட நல்லாவும் இருக்கும். அட சும்மா ஒபனா கமென்ட் அடிங்கப்பா. காசா பணமா, கருத்து தான...

படிச்சிட்டு என்னடா இவன், டாக்டர்ங்கறான், இப்படி மொக்க போடறான், மொக்க வாங்கறான்னு யோசிக்கிறீங்களா. அட நானும் மனுக்ஷன் தானேப்பு. இப்ப ஹாஸ்பிட்டல்ல கொல செய்யறதல்லாம் விட்டாச்சு. இப்போ அடுத்தவங்களுக்கு கொல செய்யறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறது தான் தொழிலே. ஆமா, வாத்தி ஆயாச்சு.

நம்ப மொக்கய படிக்கணும்னு பெரிய மனசு பண்ணி வந்த உங்களுக்கு ஒரு கும்பிடு சாமியோவ்......சிரிங்க BP ய கொறைங்க....

Thursday, July 25, 2013

பீட்டர் சைக்கிள் டைரி


சுபாக்ஷ், "டேய் அல்கேட்ஸ், நேத்திக்கு ஒரு படம் பாத்தேன்டா. நம்ம ஊருல நிறைய பேரு டீ க்ஷர்ட்ல தாடியோட ஒரு அண்ணன் ஃபோட்டோ இருக்குமே, அவர் பத்தின படம்டா".
"தாடியோட அண்ணனா? யாரு....."
"ஆமா மச்சி, புரட்சி ஓங்குகன்னு போட்ருப்பாங்க. சீமானோட அண்ணன்னு நெனைக்குறேன்".
"டேய், அவர் சே குவேரா டா. க்யூபா புரட்சிக்காக அவர் பண்ணின யுத்தம் தான் அவர ஃபேமஸ் ஆக்கிச்சு"
"ஆங் அவரே தான். படம் பேரு கூட பேட்டரி சைக்கிள்னு நெனைக்கிறேன்".
"அது மோட்டார் சைக்கிள் டைரிஸ்டா. உலக சினிமா. ஆமா உனக்கு கமல் படமே பக்கத்துல யாராவது சொல்லி புரிய வெச்சா தான் புரியும். நீ எப்படிடா உலக சினிமால்லாம் பாத்த?"
"ஹிஹி அது வந்து நம்ம சுகுமாரு கடையில ஒரு சிடியை ஆட்டைய போட்டேன். பாத்தா இந்தப் படம். அதான்"
"அதானே பாத்தேன். திருட்டு மாங்கான்னா ருசியே வேற இல்ல. ஓகே. சே குவேரா ஃபைனல் இயர் டாக்டருக்கு படிக்கிறப்ப, அவரும் ஒரு உயிர் வேதியியல் படிக்கிற ஃப்ரென்டுமா சேந்து, சவுத் அமெரிக்கா கண்டம் பூரா மோட்டார் சைக்கிள்ல சுத்தினாங்க. அந்த அணுபவத்துக்கு அப்புறம் தான் சே புரட்சியாளனா மாறுனாரு".
"மாப்ள நாம எப்படா அப்படில்லாம் ஆவுறது?"
"டேய் அவர சிஐஏ சுத்தி வளைச்சு கொன்னுடிச்சி. நீயும் சாவனுமா?"
"இல்ல மாப்ள. நீயும் ஃபைனல் இயர் MBBS படிக்கிற. நானும் MBA முடிச்சிட்டேன். நாம ஏன் இந்தியா பூரா பைக்ல சுத்தக்கூடாது? அதை நாம ஃபேமஸான பின்ன, படமா எடுப்பாங்க"
"உன்னோட சுத்தறதா? நெனைச்சாலே கொஞ்சம் கேரா வருதேடா"

-----------------------------------------------------------------------------------------------------------
நான், "அப்பா, நான் ஜாவா கத்துக்கனும், 60,000ருவா ஃபீஸ் கட்டனும். காசு குடு"
"தம்பி, நீ MBBS தான படிக்கிற? ஜாவா எதுக்குடா? அது கம்ப்யூட்டர் பசங்க படிக்கிறதாச்சே?"
படிச்ச அப்பா இருந்தா இப்படித் தான் நோண்டுவாங்க போல. நம்மளுக்கும் டூர் போக காசு வேனும், சரி ஒரு புருடா வுட்டுப் பாப்போம்.
"அப்பா, அமெரிக்கால, ஜாவா தெரிஞ்சா தான் MD சீட் கிடைக்குமாம். சுபாக்ஷ் சொன்னான்"
"அவன் MBA ஆச்சே? அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"
"அது....அது....அங்க உள்ள ஒரு மேற்படிப்பு கன்ஸல்ட்டன்ட் இவனோட ஃப்ரென்ட்டாம், அப்படித்தான் தெரிய வந்துதாம்".
"சரி சரி, இந்தா பணம். ஏய் இதென்ன இவ்ளோ மூட்ட முடிச்சு? எங்க கெளம்ப்பிட்ட?"
"நான் மெட்ராஸ்ல போய் ஃப்ரன்ட்டோட தங்கிப் படிக்கப் போறேன்"
"ஏன், இங்க அறந்தாங்கில தான் கம்ப்யூட்டர் சென்டர் இருக்கே. எதுக்கு மெட்ராஸ்லாம் போய்க்கிட்டு?"
"அது வந்து, வந்து....மெட்ராஸ்லேந்து தான அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏற முடியும். அறந்தாங்கிலேந்து முடியுமா?"ன்னு சொல்லிட்டு கேட்டுக்கு வெளியே ஒடிட்டேன்.
"அதுவும் கரெக்ட்டு தான்............என்னது???"
------------------------------------------------------------------------------------------------------------
நான், "மாப்ள, இது என்னடா பச்சையா பெருசா இருக்கு. "
"இதான் டீசல் புல்லட் மச்சி. லிட்டருக்கு 55கிமீ குடுக்கும்".
"டீசல் புல்லட்டா? இதை மார்க்கெட்லேந்து எடுத்தே 15 வருக்ஷம் இருக்குமே".
"ஆமா மச்சி, 1978 மாடல். அந்தப் படத்துல அவங்க 20 வருக்ஷம் பழைய புல்லட்ல தான் போனாங்க. இது ஜஸ்ட் 30 வருக்ஷம் பழசு. அவ்ளோ தான்"
"சரி, இதை இரும்புக் கடைல போடப்போறியா?"
"என்ன கிண்டலா? இதுல தான் இந்தியா பூரா பாக்கப் போறோம்".
"என்னடா லோடு ஆட்டோ கணக்கா லக்கேஜ் தொங்குது?"
"ஆமா மச்சி, டென்ட்டு, சின்ன கேஸ் அடுப்பு, கொஞ்சம் பாத்திரம், அரிசி, பருப்பு பொடி, கம்பளி, தண்ணி, டார்ச் லைட், மஃப்ளர்ல்லாம் இருக்கு".
"நான் எங்கடா உக்கார்ரது?"
"உன் லக்கேஜை முன்னாடி ஹெட்லாம்ப்ல மாட்டு. பின்னாடி ஸ்டெப்னிய மடில வெச்சுக்கிட்டு உக்காரு"
"புல்லட்டுக்கு ஸ்டெப்னியா? சரி போலாம்"
டகடகடகடகடகடக  டமால் டகடக டக......
-----------------------------------------------------------------------------------------------------------
அறந்தாங்கிலேந்து 15 கிமீல பஞ்சர் ஆச்சு.
"மாப்ள, அந்த ஸ்டெப்னிய குடு"
"மச்சி, எனக்கு பயமா இருக்குடா. அதுக்குள்ளயே பஞ்சர். வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவை பூரி கிழங்கு செய்யச் சொல்லி சாப்பிடலாம்"
"பயப்படாதடா....... அய்யய்யோ. ஸ்பேனர் இல்லயே.... சரி அங்க ஒரு வீடு தெரியுது. அங்க கேட்டுப் பாப்போம்"
ரோட்டை விட்டு விலகி இருந்தது ஒரு குடிசை. அங்க நடந்து போனோம்.
"சார், சார்...."
ஒரு 95 வயசு பாட்டி கம்பு ஊனிக்கிட்டு வந்துது."யாரு......."
"பாட்டி .....18-19 ஸ்பானர் இருக்கா?"
"யாரு முத்துப் பாண்டி மவனா? ராசா உன்னப் பாத்து எம்புட்டு நாளாச்சு.... உள்ள வா....சாப்பிடலாம்".
"பாட்டி நான் முத்துப் பாண்டி மவன் இல்ல. ஸ்பானர் இருக்கா? ச்ச. டேய் அல்கேட்ஸ் வா போலாம்"
திரும்பி ரோட்டுக்கு போகும் போது ஒருத்தர் கிடா மீசையோட வழி மறிச்சார்.
"டேய் யார்ரா நீங்க?"
சுபாக்ஷ், பயந்து போய், "சார். நாங்க இப்படிக்கா போகும் போது பாட்டி பஞ்சராயிடிச்சி, ச்ச பயர் டஞ்சராயிடிச்சி, இல்ல டயர் பஞ்சராயிடிச்சி. அதான் ஸ்பானர் இருக்கானு கேக்க வந்தோம்"
"உங்க வண்டியாடா அது? நெறய தட்டு முட்டு சாமான் தொங்குது. இந்த மாதிரி நெறய இடத்துல கைவரிசைய காட்டினீங்களோ? தனியா இருக்குற ஆத்தாவோட காதுல இருக்குற தங்க பாம்படத்த அடிக்க வந்தீங்களா?"
"ஐயோ சார் நாங்க ஒன்னும் திருடல".
"இங்கயே இருங்கடா. அருவாள எடுத்தாரன்"ன்னு வேகமா வீட்டுக்கு போனார்.
நாங்க ஒடிப்போய், டயர மாட்டி நட்டு போட்டு கையாலயே லைட்டா டைட்டு வெச்சிட்டு, வண்டிய எடுத்தோம்".
அந்தாளு அருவா கெடைக்காம கடப்பாறையோட ஓடி வராரு.
"டேய் சுபாக்ஷூ, வேகமா ஓட்டுறா, தொரத்தரான்டா, ஓட்றா"
-------------------------------------------------------------------------------------------------------------
போற வழில ஒரு மெக்கானிக் கிட்ட டைட் வச்சிக்கிட்டு புதுக்கோட்டைக்கு போனோம்.
நான், "மாப்ள, பசிக்குதுறா"
"சரி வா, அந்தக் கடையில போய் பரோட்டா திம்போம்"
நான், "மச்சி பாக்கவே கேவலமா இருக்குடா அந்தக் கடை".
"டேய் இதுக்கே இப்படின்னா, நார்த் போகப் போக ஒன்னுமே இருக்காது. ரோட்ல கூடைல வச்சு ரொட்டியும் வெங்காயமும் வித்துக்கிட்டுருப்பாங்க. இதுவே கெடைக்குதேனு நெனச்சுக்க".
ஆளுக்கு 5 பரோட்டாவும் சால்னாவும் அடிச்சோம்.
சுபாக்ஷ், "மச்சி, வா கோட்டைக்கு போவோம்".
"நான் நெறய தடவை பாத்திருக்கேன்டா"
"டேய் அல்கேட்ஸ், உனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. போற ஒவ்வொரு ஊர்லயும், அங்க உள்ள ஃபேமஸான எடத்தப் பாக்கனும்"
கோட்டை.........
சுபாக்ஷ், "மச்சி இங்க பார்றா கல்வெட்டு".
"நல்லா பாருடா அது லவ்வர்ஸ் கிறுக்கினது"
"ஆமா. தோ இங்க பாரு, கல்வெட்டு. என்ன எழுதியிருக்கான்? சுருபுரி ஸலிகா சிரிமபாடி....."
"டேய் வயித்த கலக்குதுடா. பரோட்டா சரியில்லடா"
"உனக்கு ரசணையே இல்லடா. இங்க பாரு தரையில ஒரு பழங்காலத்துக் கல்லு பளபளன்னு கறுப்பா இருக்கு"னு எடுத்துப் பாத்தான்.
நான், "டேய் அது கழுத சாணிடா. ஒரு வருக்ஷம் கழிச்சு அப்படித் தான் இருக்கும். சரி அந்தப் பேப்பரைக் குடு. யாராவது வராங்களான்னு பாத்துக்க"னு சொல்லிட்டு, பீரங்கிப் பக்கம் போய் ஒக்காந்தா....
செக்யூரிட்டி, "டேய் யார்ரா அது, பீரங்கி பக்கம் ஒதுங்கறது?"
நான் வேகமா பேன்ட்டை மாட்டிக்கிட்டு, "இல்லனா, பீரங்கி சக்கரத்துல என்ன எழுதியிருக்குனு பாத்தேன்".
சுபாக்ஷிடம், "மாப்ள, நான் கோட்டைய சுத்தி அகழி இருக்குமே, அது பக்கமா ஒதுங்கறேன். யாராவது வந்தா சிக்னல் கொடு".
அகழியில் ஒதுங்கினேன். அப்பாடா.
சுபாக்ஷ் நாலு வெள்ளைக்காரங்களோட மதில் சுவர்க் கிட்ட நின்னு பேசிக்கிட்டூந்தான்.
"திஸ் இஸ் அகழி. ஹியர் தான் வாட்டர்ல முதலை இருக்கும். யெஸ் குரொக்கடைல். எனிமிஸ் உள்ள வராம இருக்க. இப்போ நோ வாட்டர்".
வெள்ளைக்காரன் என்ன நோக்கி கையக் காட்டி, "வாட் இஸ் ஹி டுயிங்?"ன்னான்.
"புவர் இந்தியன் ஃபெல்லோ. டூ பாத்ருமிங். நோ ஹவுஸ், யூ சி"ன்னான்.
வெள்ளைக்காரன், என்ன மேலேந்து ஜூம் பண்ணி ஃபோட்டோ புடிச்சான்.
-----------------------------------------------------------------------------------------------------------
மதுரைக்கு போனோம். அடிக்கடி வண்டிய நிப்பாட்டி பாத்ரூம் போனதுல நைட் 10 மணி ஆயிடிச்சி.
அவன் இட்லி சாப்ட்டான். நான் குளுக்கோஸ்ல தண்ணில கரைச்சு குடிச்சேன்.
நான், "மாப்ள எங்கடா தங்குறது?"
"மாப்ள. அங்க ஒரு ப்ளாட் எம்ப்டியா இருக்கு பார். அங்க டெண்ட் போடுவோம்".
"என்னது சிட்டில டென்ட்டா? போற வரவன்லாம் வேடிக்க பாப்பானுங்கடா. ஏதாவது லாட்ஜில தங்கலாம்டா"
"உனக்கு அட்வென்ச்சர் சென்ஸே இல்லடா. அதுக்குத்தான் நைட்டு 12 மனிக்கு மேல டென்ட் அடிப்போம்னேன்"
நைட்டு 12 மணி. இருட்டுல ஒன்னும் தெரியல. அந்த எடத்துல ஒரு மேட்டுல டென்ட் அடிச்சு, அசதில தூங்கியாச்சு. கனவுல கடப்பாறையோட ஒருத்தன் என் பட்டக்ஸைக் குத்த், நான் அலறி அடிச்சுக்கிட்டு எழுந்தா, விடிஞ்சிருச்சி.
வெளிய வந்துப் பாத்தா நாங்க டென்ட் அடிச்ச எடம் ஒரு குப்ப கொட்டுற எடம். எல்லாரும் குப்பைய கொட்டிட்டு, எங்கள ஆன்னு பாக்குறாங்க. ச்சை.
ஒருத்தன் லுங்கியோட வந்தான். பத்துப்பேரு பாத்துக்கிட்டுருந்தானுங்க. சுபாக்ஷும் எழுந்து வந்தான்.
லுங்கி, " டேய், என்னடா இங்க கொட்டா போட்ருக்கீங்க. இது என்னோட எடம். நல்ல ரேட்டு வரும், விக்கலாம்னு பாத்தா நில அப்கரிப்பு பண்ணி, குடிச போடுறீங்களா?"
நான், "சார், சார், சார். இது உங்க எடம்னு தெரியாது. ஒரு அஞ்சு நிமிக்ஷம் டயம் கொடுங்க, கெளம்பிர்றோம்"
"நான் யார் தெரியுமா? மார்க்கெட் அப்புவோட மச்சான்டா. இரு அவர கூப்டுறேன்".
ஐயோ ரவுடியோ? நாங்க டென்ட்டை அவசரமா பிரிக்கப் பாத்தா, அவன் தடுத்தான்.
100 நிமிக்ஷத்துல ஒரு ஸ்கார்ப்பியோ வந்தது அப்பு வந்தான். தடிப்பயல். செம்பட்டைத்தல. மூஞ்சி பூரா அம்மைத் தழும்பு. இன்னொரு நாலு பேரு.
அப்பு, "ஏன்டா, என் மாப்ளையோட எடத்துலயா குடிச போடுறீங்க? நான் யார் தெரியுமா? ஆளுங்கட்சி ரவுடிடா"ன்னு சொல்லிட்டு யாருக்கோ ஃபோனைப் போட்டான். நாலு பேரு சேந்து எங்கள போஸ்ட் மரத்துல கட்டினானுங்க.
நான், "அண்ணே, எங்கள வுட்ருங்கண்ணே. நான் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட். சும்மா ஊர் சுத்திப் பாக்க வந்தோம்".
"வந்து....எங்க எடத்த வளைச்சிப் போடுவீங்களா?"ன்னு பளார்னு ஒரு அறை விட்டான். எல்லாரும் ஏன் என்னை சுத்துறாங்க? ஓ நம்க்கு தான் மயக்கம் வருதோ?
முழிச்சுப் பாத்தா, நான் போலீஸ் ஸ்டேக்ஷன்ல படுத்துருக்கேன். சுபாக்ஷ் மூஞ்சியெல்லாம் வீங்கி, ஜட்டியோட அப்படியே திருட்டுப்பய மாதிரியே குந்திக்கிட்டு யாரையோ உத்துப் பாத்துக் கிட்டுருந்தான்.
"டேய் சுபாக்ஷு"
"க்ஷ்க்ஷ்க்ஷ்...மாப்ள, அப்படியே கிட. முழுச்சிக்கிட்டீனா பின்னிருவாங்க. 2 மணி நேரமா போற வர கான்ஸ்டபிள், ஏட்டு, லேடிஸ் போலீஸ் எல்லாரும் என்னை ஒதைக்கிறாங்க. இப்பத் தான் உங்கப்பாக்கு எஸ்.ஐ ஃபோன் பன்னிருக்காரு". நான் திரும்ப தூங்கிட்டேன்.
ஒரு மணி நேரம் கழிச்சு....அப்பா.
எஸ்.ஐக் கிட்ட ஏதேதோ பேசி எங்கள கூட்டிட்டு போய் கார்ல ஏத்தினாரு.
சுபாக்ஷ், "அங்கிள், என்னோட புல்லட்?"
"உன்னோட புல்லட் தானா அது. வரும் போது பாத்தேன். ஸ்டேக்ஷன் பக்கத்துல சாராய லாரி பக்கத்துல போட்டுருக்காங்க. அதை மறந்துடு".
நான், "எப்படிப்பா அதுக்குள்ள வந்தீங்க?"
"நீ அகழில பாத்ரூம் போன ஃபோட்டோ இன்னிக்கு பேப்பர்ல வந்தது. ஒரு ஃபாரினர், 'இந்தியாவின் சாபக்கேடு'ங்கிற தலைப்பில் போட்ருந்தான். நேத்து நீ போட்ட சட்டை மாதிரியே இருந்துதா, உனக்கு ஃபோன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப். சரின்னு கெளம்பிட்டேன். புதுக்கோட்டைல நான் இருக்கும் போது எஸ்.ஐ ஃபோன் பண்ணினார், இங்க வந்தேன்"
"பணம் எதாவது செலவாச்சாப்பா?"
"எஸ்.ஐக்கு 50,000, அப்புவுக்கு 10,000ம்னு உன் ஜாவா பணத்தை பிரிச்சிக்கிட்டாங்க. ஏன்டா மதுரைக்கு போகனும்னா, என்க்கிட்ட சொல்ல வேண்டியது தான?"
"அங்கிள். இது ஆல் இன்டியா ட்ரிப். புரட்சிக்கான விதைய தூவ, ஒரு பயணம்"னு சுபாக்ஷ், மூக்குல வழிஞ்ச ரத்தத்தை துடைச்சிக்கிட்டே சொன்னான்.

9 comments:

  1. சிரிப்பு புரட்சி

    ReplyDelete
  2. //"தாடியோட அண்ணனா? யாரு....."

    "ஆமா மச்சி, புரட்சி ஓங்குகன்னு போட்ருப்பாங்க. சீமானோட அண்ணன்னு நெனைக்குறேன்".//

    ROFL :D

    ReplyDelete
  3. really wonderful.. neengathan unmaiyana doctor.. ippadiye siricha elloruduya diseasum sari agidum.. thanks..

    ReplyDelete
  4. நீ அகழில பாத்ரூம் போன ஃபோட்டோ இன்னிக்கு பேப்பர்ல வந்தது. ஒரு ஃபாரினர், 'இந்தியாவின் சாபக்கேடு'ங்கிற தலைப்பில் போட்ருந்தான். நேத்து நீ போட்ட சட்டை மாதிரியே இருந்துதா, உனக்கு ஃபோன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப். சரின்னு கெளம்பிட்டேன். புதுக்கோட்டைல நான் இருக்கும் போது எஸ்.ஐ ஃபோன் பண்ணினார், இங்க வந்தேன்"
    "பணம் எதாவது செலவாச்சாப்பா?"
    "எஸ்.ஐக்கு 50,000, அப்புவுக்கு 10,000ம்னு உன் ஜாவா பணத்தை பிரிச்சிக்கிட்டாங்க. ஏன்டா மதுரைக்கு போகனும்னா, என்க்கிட்ட சொல்ல வேண்டியது தான?"///ROFL.

    ReplyDelete

  5. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. Motorcycle diaries பல வருஷம் முன்னாடி பார்த்தேன் ஆனா சத்தியமா இவ்வளவு நகைச்சுவையா மாத்த உங்களால எப்படி முடிந்தது, சிறப்பு போங்க

    ReplyDelete